கிருஷ்ணகிரியில் வழக்கறிஞர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு :

கிருஷ்ணகிரியில் வழக்கறிஞர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் வழக்கறிஞர் வீட்டில் 17 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞர் முருகன் (52). இவர் குடும்பத்துடன் கடந்த 31-ம் தேதி தனது சொந்த கிராமமான சின்னமட்டாரப்பள்ளிக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த முருகன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17.2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in