குடும்ப தகராறில் மூதாட்டி கொலை : மருமகள் உட்பட 4 பேர் கைது

குடும்ப தகராறில் மூதாட்டி கொலை :  மருமகள் உட்பட 4 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர் திலகர் நகர் முதல்வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது முதல் மனைவி மயங்காத்தாள் (62). குழந்தை இல்லாத நிலையில், தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து ராமசாமி, சகுந்தலா என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு கார்த்தி, சரவணக் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சகுந்தலா உயிரிழந்ததால், ராமசாமி, தனது முதல் மனைவி மயங்காத்தாளை அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.

ராமசாமியின் மூத்த மகன் கார்த்திக்கு, அதே பகுதியை சேர்ந்த பிருந்தாவை கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். கார்த்தியின் தம்பிசரவணக்குமார், பிருந்தாவின்தங்கையை விரும்பியதாகக் கூறப்படுகிறது. இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தெரியவந்ததால், பிருந்தாவின் உறவினர்கள் நேற்று முன்தினம் பேசுவதற்காக ராமசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, மயங்காத்தாள், கார்த்தி, சரவணக்குமார் மற்றும் பிருந்தா, அவரது தம்பி சுஷாந்த், தந்தை அன்பழகன், உறவினர் ராம் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மயங்காத்தாளை, பிருந்தாவின் குடும்பத்தினர் கீழேதள்ளிவிட்டதில், மரக்கட்டிலில் மோதி அவர் பலத்த காயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மயங்காத்தாள் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து ராமசாமி அளித்த புகாரின் பேரில், பிருந்தா (26), இவரது தம்பி சுஷாந்த், தந்தைஅன்பழகன், உறவினர் ராம் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து 15 வேலம்பாளையம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in