நாகரசம்பட்டி அருகே வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு :

நாகரசம்பட்டி அருகே வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

நாகரசம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள சின்னகரடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (32). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in