Published : 05 Aug 2021 03:18 AM
Last Updated : 05 Aug 2021 03:18 AM

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., பொறுப்பேற்பு :

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,யாகப் பணிபுரிந்த ரவளிபிரியா தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த வி.ஆர்.ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்..

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வி.ஆர்., ஸ்ரீனிவாசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் கூறியதாவது: சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்க அரசின் விதிகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் புகார்கள் மீது தனிக் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x