Published : 05 Aug 2021 03:19 AM
Last Updated : 05 Aug 2021 03:19 AM

சிவகங்கையில் போதையில் - பேருந்தை நிறுத்தி தகராறு செய்த இளைஞர் :

சிவகங்கை

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மினி பஸ் சூரக்குளம், நாலுகோட்டை வழியாக சோழபுரம் வரை இயக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் இந்த பேருந்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஏறினார். பேருந்து சென்று கொண்டிருந்தபோது போதையில் இருந்த அந்த இளைஞர் சக பயணிகளிடம் தகராறு செய்தார்.

சிவகங்கை சனீஸ்வரன் கோயில் அருகே சென்றபோது பேருந்தை பாதி வழியில் நிறுத்தி தகராறு செய்தார். இதைத் தட்டிக்கேட்ட நடத்துநரை தாக்க முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சிவகங்கை நகர் காவல் நிலையத்துக்கு பஸ்ஸை ஓட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்து போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் நாலுகோட்டையைச் சேர்ந்த சரவணன் (20) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x