புன்னம்சத்திரத்தில் சாலை மறியல் :

புன்னம்சத்திரத்தில் சாலை மறியல் :
Updated on
1 min read

வல்வில் ஓரி பதாகையைச் சேதப்படுத்திய

வர்களை கைது செய்ய வலியுறுத்தி புன்னம்சத்திரத்தில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் வேட்டுவக் கவுண்டர் சங்கம் சார்பில் வல்வில் ஓரி பதாகை நேற்று முன்தினம் வைக்கப்பட்டிருந்தது. இப்பதாகை நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டித்தும், பதாகையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் வேட்டுவக் கவுண்டர் சங்கத்தினர் புன்னம்சத்திரத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப் பட்டது. இதனால் கரூர்- ஈரோடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in