Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம் :

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் அகமுடி நாகலிங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் மோகன் (30). ஆட்டோ ஓட்டுநர். கிருஷ்ணகிரியில் உள்ள கிரானைட் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு நேற்று காலை வந்தனர். அவர்களை, அழைத்து வர மோகன் தனது ஆட்டோவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தார். வட மாநில தொழிலாளர்கள் 7 பேரை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டார். ஜோலார்பேட்டை - நாட்றாம்பள்ளி பிரதான சாலை, ஜோலார்பேட்டை நகராட்சிஅலுவலகத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வடமாநில தொழிலாளர்கள் 7 பேரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மோகன் உடலை கைப்பற்றி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x