Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

கள்ளக்குறிச்சி அருகே - இரு இளைஞர்கள் மர்மச் சாவு :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேல் சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த வர்கள் தனிகாசலம் (27), கார்த்திக் (24). இவர்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள சாகிபு என்பவருடைய நிலத்தில் உள்ள நுணா மரத்தில் நேற்று தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

இதைக்கண்ட அக்கிராம மக்கள் வடபொன்பரப்பி போலீஸாருக்குத் தகவல் அளித்துள் ளனர். போலீஸார் அங்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதை ஊர் மக்கள் அறிந்து, இவர்களை ஏளனமாக பேசியதாகவும், அதனால் மனமுடைந்து இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக் கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இதில், கார்த்திக் என்பவருக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x