Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணி - வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு :

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் ஆட்சியர் தர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் தியாகதுருகம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் 2021-க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல், 249 வாக்குச்சாவடிகளுக்கான படி வங்கள் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர், இந்திலி ஊராட்சியில் சமுதாயக் கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தொடங்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

வாக்கு மையங்களில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் அமைத்திடவும், வாக்குச்சாவடி மையங்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்திடவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சு.குமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆர்.மஞ்சுளா ஆகி யோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x