Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM
தமிழக அரசு உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பத்மநாபபுரம் நகராட்சியில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமையில் விழிப்புணர்வு வாரம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் வியாபாரிகளுக்கு கரோனா விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமை வகித்தார். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், வியாபாரிகள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்தும் அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க பொதுச்செயலாளர் விஜயகோபால், நகர வணிகர் சங்கத் தலைவர் ரேவன்கில் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT