Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

தக்கலையில் - கோயில், வீடு, கடையில் திருட்டு :

தக்கலை அருகே முத்தலக்குறிச்சியை சேர்ந்தவர் கிரைஸ்மேரி(57). இவர், புதுக்கோட்டையில் அரசுபள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கால் சொந்த ஊரில் இருந்த கிரைஸ்மேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக் கோட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீடு நேற்று திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்த தக்கலை போலீஸார் அங்குவந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 75 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைப்போல் முத்தலக்குறிச்சி முத்தாரம்மன் கோயில் முன்பிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. கோயில் பூட்டை உடைத்து திருடவும் முயற்சித்துள்ளனர்.

மேலும் தக்கலை அருகே கொல்லன்விளையில் கார் உதிரிபாகங்கள் விற்கும் விஷாக் என்பவரின் கடையை உடைத்து உதிரிபாகங்களை திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடைபெற்ற திருட்டு குறித்து தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x