Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி தலைமை இயக்குநராக (புலனாய்வு) சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார்.
சுனில் மாத்தூர், 1988-ம் ஆண்டுஇந்திய வருவாய் பணி அலுவலர்கள் அணியைச் சேர்ந்தவர். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மேற்குவங்கம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமானவரித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர்பதவி வகித்துள்ளார். மத்திய தொழிலாளர் மற்றும்வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2014-15-ம் ஆண்டில் தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் லி குவான் யு பொதுக் கொள்கை பள்ளியில் பொது நிர்வாகத்தில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை முடித்துள்ளார்.
தற்போது பதவி உயர்வு பெற்று, வாரணாசியில் இருந்து மாற்றலாகி சென்னை வந்துள்ளார்.
இந்த தகவலை சென்னை வருமானவரித் துறையின் கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) டி.ரோகிணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT