Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

ஆரணி அருகே - தந்தையை கொன்ற மகன் கைது :

ஆரணி அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் வசித்தவர் கூலி தொழிலாளி குணசேகரன்(70). இவரிடம் மது குடிக்க பணம் கேட்டு, அவரது மகன் தேவக்குமார் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், மது குடிக்க நேற்று பணம் தர மறுத்த தந்தை குணசேகரனை கட்டையால் மகன் தேவக்குமார் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் உயிரிழந்தார். இதையறிந்த தேவக்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாமண்டூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தேவக் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x