Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

சக்தி அம்மாவின் தந்தையின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி :

வேலூர் அடுத்த புரம்  சக்தி அம்மாவின் பூர்வாஸ்ரம தந்தை நந்தகோபாலின் மறைவுக்கு பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு சாகர் தோட்டத்தில் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.

வேலூரின் அடையாளமாக உள்ள புரம் பொற்கோயிலை நிறுவிய  சக்தி அம்மாவின் பூர்வாஸ்ரம தந்தை நந்தகோபால். அரியூர் கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்தவர். ஆசிரியையாக பணிபுரிந்த ஜோதியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூத்த மகனாக  நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி யும், இளைய மகனாக சக்தி அம்மா ஆகியோர் ஆவார்கள். அனைவ ராலும் நேசிக்கப்பட்ட நந்தகோபால் நேற்று முன்தினம் பிற்பகல்  நாராயணி திருவடிகளில் ஐக்கியமானார்.  நாராயணி மஹால்  நிவாஸ் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து, புரம்  நாராயணி ஆயுர்வேதிக் மையம் அருகில் உள்ள சாகர் தோட்டத்தில் நேற்று இறுதி சடங்கு நடைபெற்றது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x