Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM

நிர்வாகிகள் அறிவிப்பில் அதிருப்தி : காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் :

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர்,காங்கிரஸ் வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர்அய்யலுசாமி தலைமையில் கோவில்பட்டி காந்தி மண்டபத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியை சாதி அமைப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். கட்சி விசுவாசிகளுக்கு பதவி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். காங்கிரஸ் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் திருப்பதிராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக மண்ணெண்ணெய் கேனை பறிக்க முயன்றதால் போலீஸாருடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியை சாதி அமைப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். கட்சி விசுவாசிகளுக்கு பதவி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x