Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 986 கன அடி தண்ணீர் திறப்பு :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் கன்னிப்பூ நெல் சாகுபடி பயிர்கள், தென்னை, வாழை, மற்றும் பிற பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

குளத்துநீர் பாசனம் கிடைக்கும் வேளாண் பரப்புகளை தவிர பிற வயல், தோப்புகளுக்கு ஆற்றுப்பாசனம் மூலமே சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 986 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.21 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 474 கனஅடி தண்ணீர் வருகிறது. 636 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.85 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 37 கனஅடி தண்ணீர் வருகிறது. 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் 24 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 7.42 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x