Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

கோவில்பட்டி பெயின்டர் கொலையில் 17 வயது சிறுவன் கைது :

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் (22). பெயின்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 29-ம் தேதி கொலை செய்யப்பட்டார். மந்தித்தோப்பு பாண்டவர்மங்கலம் குளக்கரையில் கிடந்த இவரது உடலை மீட்டு கோவில்பட்டி மேற்கு போலீஸார் விசாரித்தனர். இவ்வழக்கில் மதன்குமாருடன் பெயின்டராக வேலை பார்த்த தீத்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் கோவில்பட்டிக்கு நேரில் வந்து பாராட்டினார்.

பின்னர் அவர் கூறும்போது, “கொலையான மதன்குமாரும், 17 வயது சிறுவனும் பெயின்டராக வேலை பார்த்து வந்தனர். ஒரு பெண்ணிடம் பழகுவது தொடர்பாக இவர்களிடையே பிரச்சினை எழுந்துள்ளது. கடந்த 29-ம் தேதி பாண்டவர்மங்கலம் குளக்கரைக்கு அழைத்துச் சென்று மதன்குமாரை சிறுவன் கொலை செய்துள்ளார்” என்றார்.

“மதன்குமார் கொலை குறித்து அவரது தந்தை போலீஸில் புகார் அளிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்ட சிறுவனும் உடன் இருந்துள்ளார்.

மதன்குமார் தந்தை மயங்கி விழுந்தபோது, சிறுவன் கதறி அழுதுள்ளார். மதன்குமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் ஆராய்ந்தபோது, 29-ம் தேதி இரவு அவருடன் 4 முறைக்கு மேல் சிறுவன் பேசியது தெரியவந்தது. விசாரித்ததில் நடந்த விவரங்களை சிறுவன் ஒப்புக்கொண்டார்” என, போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x