Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

பான் மசாலா கடத்தியதாக 3 பேர் கைது :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த அப்துல்லா புரம் பகுதியில் இருந்து பான் மசாலா பொருட்கள் காரில் கடத்தப்படுவதாக தூசி காவல் நிலையத்துக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து. காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான காவல் துறையினர், அப்துல்லாபுரம் பகுதிக்கு விரைந்தனர். அப்போது அங்கு சேர்ம ராஜ் என்பவரது வீட்டின் பின் பகுதியில் காரில் இருந்து ஆட்டோவில் தடை செய்யப்பட்ட பான் மசாலாப் பொருட்கள் மாற்றம் செய்யப் படுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடத்தல் கும்பலை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், பெங்கரூவில் இருந்து பான் மசாலா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தூசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பான் மசாலா கடததலில் ஈடுபட்ட அப்துல்லாபுரம் சேர்மராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான தமிம் அன்சாரி, சலீம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x