Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

துப்பாக்கி வைத்திருந்தவர் கைது :

கிருஷ்ணகிரி

பர்கூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வரை போலீஸார் கைது செய்தனர்.

பர்கூர் அடுத்த சங்கிலிநத்தம் அடுத்த மல்லவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் ரேஷன் கடையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, போலீஸார் அண்ணாதுரை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x