Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

செய்யாறு-ஆற்காடு சாலையில் : தடுப்பு அமைக்கும் பணி தாமதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி

செய்யாறு - ஆற்காடு சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கான்கிரீட் தடுப்பு.

செய்யாறு

செய்யாறு – ஆற்காடு சாலையின் நடுவே தடுப்பு அமைக்கும் பணி தடைபட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – ஆற்காடு சாலையின் நடுவே தடுப்பு (டிவைடர்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு 3 அங்குல உயரத்துக்கு கான்கிரீட் தடுப்பு எழுப்பப்பட்டது. 3 வாரத்துக்கு முன்பு நடைபெற்ற பணி, அதன் பிறகு தொடரவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, “ஆற்காடு சாலையில் கடந்த 3 வாரத்துக்கு முன்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, சுமார் 3 அங்குலம் உயரத் துக்கு கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்தப் பட்டது. அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை. இதனால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு இருப்பது தெரியவில்லை.

இரு சக்கர வாகனங்களை இயக்கி செல்லும் போது, தடுப்பு மீது ஏற்றிவிடுவதால், நிலை தடுமாறி கீழே விழுந்து பலரும் காயமடைந்து வருகின்றனர். நான்கு சக்கர வாகனங்களும் நிலை தடுமாறிவிடுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவது மிகுந்த சிரமமாக உள்ளது. கான்கிரீட் தளம் மீது கனரக வாகனங்கள் இயக்கப் படுவதால், தற்போது சேதமடைந்து விட்டது. அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக, சாலையின் நடுவே தடுப்பு அமைக்கும் பணியை முழுமை யாக முடிக்க வேண்டும். இல்லை என்றால், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்பை அகற்ற வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x