கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 148 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 148 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 8 1 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் 58,883 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 28பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 47பேர் குணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து 43,098பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 412பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 341பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 52 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரையில் 29,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in