Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

திண்டுக்கல்லில் அம்மா உணவக பணியாளர் மறியல் :

திண்டுக்கல் நகரில் பூ மார்க்கெட் அருகே மற்றும் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்படுகிறது. 24 பேர் பணிபுரிந்தனர். இவர்கள் நேற்று முதல் பணி நீக்கம் செய்யப்பட்டு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் அம்மா உணவக ஊழியர்கள் நேற்று மறியல் செய்தனர்.

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் கலைந்து போகச்செய்தனர். இதையடுத்து பணியாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்கு தரையில் அமர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டத்தை தொடர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x