Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

விபத்தில் 5 வாகனங்கள் சேதம் :

கிருஷ்ணகிரி

ஓசூரில் இருந்து காய்கறி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலையில் தனியார் கல்லூரி முன்பாக வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், ஒரு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் ஒரு காய்கறி வேன், 3 லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் என மொத்தம் 5 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த குருபரப்பள்ளி போலீஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x