Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM
நாகர்கோவிலை அடுத்துள்ள கீழசரக்கல்விளை கன்னங்குளத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(50). கஞ்சா விற்பனை செய்ததாக இவரை கடந்த 21-ம் தேதி வடசேரி போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், ஆசாரிபள்ளம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த அவர், கடந்த 28-ம் தேதிநாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். போலீஸார் தாக்கியதில் காமராஜ் காயமடைந்து உயிரிழந்ததாக அவர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT