குறுங்காடு அமைக்கும் திட்டம் தொடக்கம் :

குறுங்காடு  அமைக்கும் திட்டம் தொடக்கம்   :
Updated on
1 min read

அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தை மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ் ணன் நேற்று தொடங்கி வைத் தார்.

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், இணையவழி குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினார்.

அதன்பின்,காவலர் குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறுங்காடு வளர்க்கும் திட்டத்தை, ஐ.ஜி பாலகிருஷ்ணன் மரக்கன்று களை நட்டு தொடங்கி வைத்தார்.

10 சென்ட் இடத்தில் நாவல், கொய்யா, புங்கன். வேம்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in