சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு :

சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் தட்டாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ரஞ்சிதா, கடந்த வருடம் இறந்துவிட்டார்.

இதனால், மணிகண்டன், தனது மகன்களான ஹரீஸ், சந்தீப் ரோஷனுடன் வசித்து வருகிறார். மணிகண்டன் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த சந்தீப் ரோஷன்(4), வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்து அதிர்ச்சியடைந்த சந்தீப் ரோஷனின் பாட்டி, பேரனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸார் சிறுவ னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in