Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

கைலாசகிரி கோயிலில் - ஆடி கிருத்திகை விழா ரத்து :

ஆம்பூர் கைலாசகிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு கரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட் சியர் அனந்தகிருஷ்ணன் தலைமை யில் நேற்று நடைபெற்றது.

இதில், கோயில் நிர்வாக அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கைலாசகிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை பெருவிழா ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும், கோயில் நிர்வாகத்தின் மூலம் மூலவருக்கு எளிமையான முறையில் பக்தர்கள் இல்லாமல் மூன்று கால பூஜை நடத்தவும் முடிவானது. அதேபோல், திருவிழா கடைகள் அமைக்கவும் அனுமதியில்லை என வரு வாய்த்துறை அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x