கிருஷ்ணகிரியில் கேட்பாரற்று கிடந்த 32 வாகனங்கள் மீட்பு :

கிருஷ்ணகிரியில் கேட்பாரற்று கிடந்த  32 வாகனங்கள் மீட்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேட்பாரற்று கிடந்த 32 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல்செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவெண் இல்லாமலும், சந்தேகத்திற்கிடமான இடங்களில் கேட்பாரற்று கிடந்த, 32 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பர்கூர் எஸ்.ஐ., சங்கரன் மற்றும் போலீஸார் பர்கூர் - ஜெகதேவி சாலையில், 10 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

கந்திகுப்பம் எஸ்.ஐ., ராஜாமணி மற்றும் போலீஸார் வரட்டனப்பள்ளி ஏரி அருகே 3 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர் . நாகரசம்பட்டி எஸ்.ஐ., பச்சமுத்து மற்றும் போலீஸார் நாகரசம்பட்டி ஏரிஅருகே நிறுத்தியிருந்த, 10 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். பாரூர் எஸ்.ஐ., பாண்டியன் மற்றும் போலீஸார் கீழ்குப்பம் பகுதியில் 3 வாகனங்களையும், போச்சம்பள்ளி எஸ்.ஐ., மகேந்திரன் மற்றும் போலீஸார் போச்சம்பள்ளி வாரச்சந்தை மைதானம் அருகே 6 இருசக்கர வாகனங்களையும் கைப் பற்றினர். ஒரே நாளில் கேட்பாரற்று கிடந்த 32 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in