Published : 31 Jul 2021 03:15 AM
Last Updated : 31 Jul 2021 03:15 AM

ஆட்சியில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பணிகள் : அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திமுக ஆட்சியில் அனைத்துப் பணிகளும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: கூட்டுறவு சங்கங்களில் மகளிர் குழுக்களுக்கான கடன், சிறுதொழில் கடன் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சியில் அனைத்து பணிகளும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கின்றன என்றார்.

அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இ.பெ. செந்தில்குமார், எஸ்.காந்திராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x