Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM
வேலூர்/ராணிப்பேட்டை: வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புசாரா நல வாரிய தொழிலாளர்களுக்கு ரூ.62.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ரூ.62.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் வழங்கினார். இதில், 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,500 பேருக்கு திருமண நிதியுதவி, மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தாமரை மணாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT