Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM

2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி :

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் தற் போது நடைபெற்று வரும் குறுவை அறுவடையை முன் னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூத்தூர் கிராமத்தில் இன்று(ஜூலை 30) முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, முத்துவாஞ்சேரி கிராமத்தில் ஆக.4-ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது.எனவே, இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x