Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM

தி.மலையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

திருவண்ணாமலை: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தரணி சர்க்கரை ஆலை பிரிவு செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். அப்போது விவசாயிகள் கூறும்போது, “கரும்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான தொகை ரூ.26 கோடியை வழங்காமல் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்துவிட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக கொள் முதல் தொகையை வழங்காததால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியவில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு விதிப்படி 15 சதவீத வட்டியுடன் ரூ.26 கோடியை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பின்னர் அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். அப்போது, தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர்கள் பெருமாள், வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x