Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

ஜீவன் ரக்‌ஷா விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு :

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் ஜீவன் ரக்‌ஷா விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின் விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஆண்டுதோறும் இந்திய அரசு சார்பில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது. மீட்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் ஆபத்தில் சிக்கியவரை வீரத்துடன் போராடி மீட்பவருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதும், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகர நிலையில் உள்ளவரை போராடி மீட்பவருக்கு உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதும், தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுவோருக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதும் வழங்கப்படும்.

இந்த விருதுக்கு இருபாலின அனைத்து தரப்பினரும் தகுதியானவர்கள். ஆயுதப்படை, காவல் படை, அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்புப் படை வீரர்களும் இவ்விருதுக்கு தகுதி உடையவர்கள். அதேநேரம், அவர்களுடைய பணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

இவ்விருதுகளுக்கான பரிந்துரைகள் 2 ஆண்டு காலத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1.10.2019-க்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளே விருதுக்கு பரிசீலிக்கப்படும். 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெறலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அதே அலுவலகத்தில், வரும் 5.8.21 அன்று மாலை 5 மணிக்குள் அளித்திட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x