Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

ராணுவ வீரர் வீட்டில் திருட்டு :

தருமபுரி உங்கரான அள்ளி அருகிலுள்ள ஏமக்குட்டியூரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர் மனைவி மகாலட்சுமி (29) ஏமக்குட்டியூரில் உள்ள வீட்டில் வசிக்கிறார். இவர், அருகிலுள்ள வெங்கட்டம்பட்டியில் இருக்கும் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் இரும்பு கேட் மற்றும் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி வீட்டில் பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு கிடந்தது. அதில், இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி குத்துவிளக்கு, குங்குமச் சிமிழ் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. எனவே, மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து மகாலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில், ராணுவ வீரர் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, மாவட்ட ஆட்சியர் இல்லம் அருகில் எர்ரப்பட்டி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (57). இவர் மற்றும் இவரது மனைவி இருவரும் தங்கள் மகனின் திருமண வேலையாக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றனர். மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆய்வு செய்தபோது 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கந்தசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x