Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

தருமபுரி அங்காடியில் ரூ.5.95 லட்சத்துக்கு : பட்டுக்கூடு ஏலம் :

தருமபுரி

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று ரூ.5.95 லட்சத்துக்கு பட்டுக் கூடுகள் வர்த்தகம் நடந்தது.

தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறையின் கட்டுப் பாட்டில் தருமபுரி 4 ரோடு அருகே அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இங்கு நேற்று 21 விவசாயிகள் 1559.80 கிலோ(43 லாட்) வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த கூடுகளின்தரத்துக்கு ஏற்ப கிலோவுக்கு அதிகபட்சவிலையாக ரூ.421-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.300-ம், சராசரி விலையாக ரூ.382.09-ம் கிடைத்தது. இதன் மூலம் நேற்று பட்டுக் கூடு அங்காடியில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 983-க்கு வர்த்தகம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x