Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

நெல்லை மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில், திருநெல்வேலி மாநகரில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. கரோனா 2-வது அலையின்போது பாதிப்பு கண்டறியப்படாத நாளாக அது இருந்தது. ஆனால், அடுத்த நாள் 26-ம் தேதி ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. 27-ம்தேதி 5 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று காலையில் வெளியாயின. அதில் திருநெல்வேலி மாநகரில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அதேநேரத்தில் மாவட்டத்தில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி யாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x