Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

சிறு, குறு விவசாயி சான்று பெற முகாம் :

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று பெற சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் ஜூலை 29-ம் தேதி (இன்று) சிறு, குறு விவசாயி சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இச்சான்றினை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நிலங்கள் அமைந்துள்ள வருவாய் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அடங்கல், பட்டா, சிட்டா நகல்களுடன் தங்களது குறு வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஜூலை 29-ம் தேதி (இன்று) நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x