சிறு, குறு விவசாயி சான்று பெற முகாம் :

சிறு, குறு விவசாயி சான்று பெற முகாம் :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று பெற சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் ஜூலை 29-ம் தேதி (இன்று) சிறு, குறு விவசாயி சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இச்சான்றினை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நிலங்கள் அமைந்துள்ள வருவாய் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அடங்கல், பட்டா, சிட்டா நகல்களுடன் தங்களது குறு வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஜூலை 29-ம் தேதி (இன்று) நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in