Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM

நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல் :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் குறுவை பட்டம் நெல் சாகுபடி சுமார் 2,000 ஏக்கரில் நடைபெற்றது. தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அறுவடை செய்த நெல்மணிகளை, சம்பா சாகுபடி கொள்முதல் செய்த நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர்.

இருவாரங்களுக்கு மேலாகியும் இதுவரை நெல் கொள்முதல் செய்யாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அரியலூர்- தா.பழூர் சாலையில் நெல்லை கொட்டி நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அரியலூர் - தா.பழூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x