Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

திருப்பத்தூரில் அடுத்தடுத்து 6 வீடுகளில் திருட்டு :

திருப்பத்தூரில் அடுத்தடுத்து 6 வீடுகளில் மர்ம நபர்கள் நுழைந்து தங்க நகைகள், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அபாய் தெருவில் வசித்து வருபவர் அன்பு (45). இவரது மனைவி முத்துலட்சுமி (42).நேற்று முன்தினம் இரவு வீட்டில் அன்பு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண் டிருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக் குள் நுழைந்த மர்ம நபர்கள் அன்பு மகன் பூமிஸ்(5) அணிந்திருந்த அரை பவுன் தங்கச்செயின் மற்றும் 250 கிராம் எடையுள்ள வெள்ளிக் கொலுசு மற்றும் மகள் சுவிக்ஸா(7) அணிந்திருந்த 150 கிராம் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு வெளியேறினர்.

அதன்பிறகு, அதே தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் (49) என்பவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு 1 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி மற்றும் 4 ஆயிரம் பணம் ஆகியவற்றையும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிவக்குமார்(40) என்பவரது வீட்டுக்குள் நுழைந்து அங்கு நகை, பணம் ஏதும் இல்லாத தால், அவரது வீட்டில் அன்னக்கூடை மற்றும் அலுமினிய பாத்திரங்களை திருடியுள்ளனர்.

அதன்பிறகு, மளிகைக்கடை உரிமையாளரான சபீர்(35) என்பவரது வீட்டுக்குள் நுழைந்த அதே மர்ம நபர்கள் அங்கு அலுமினிய பாத்திரங்களை திருடியுள்ளனர்.

அதன்பிறகு ஆனந்தன் (48) என்பவரின் வீட்டில் நள்ளிரவு 1.45 மணி அளவில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பித்தளை மற்றும் அலுமினிய பாத்திரங்களை திருடிக்கொண்டு அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி தப்பிக்க முயன்ற போது,சத்தம் கேட்டு ஆனந்தன் மற்றும் அவரது மனைவி கூச்சலிட்டனர்.உடனே, மர்ம நபர்கள் பாத்திரங் களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி யோடினர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வர்கள் நேற்று தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x