Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

வாணியம்பாடி பட்டு வளர்ச்சி துறை - உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் : விசாரணையில் வெளிப்படை தன்மை வேண்டும் என முழக்கம்

வாணியம்பாடியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் ‘‘பட்டுக்கூடுகளை’’ விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் கொண்டு வரும் பட்டுக்கூடுகளுக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பட்டு வளர்ப்பு விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டு வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், வாணியம்பாடியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று காலை வந்தனர்.

இதையறிந்த திருப்பத்தூர் மாவட்ட பட்டு வளர்ப்பு விவசாயிகள் அங்கு திரண்டனர். அப்போது, அதிகாரிகளின் விசாரணையில் வெளிப்படை தன்மை வேண்டும், அனைத்து பட்டு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நியாயம் வழங்க வேண்டும், விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கக்கூடாது, எங்களிடமும் கருத்துக்கேட்க வேண்டும் எனக்கூறி உள்ளே நுழைய முயன்றனர்.

ஆனால், பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளே வர விவ சாயிகள் மறுக்கப்பட்டு நுழைவு வாயில் ‘கேட்’ மூடப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த விவ சாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து பட்டு விவசாயிகள் கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,500 ஏக்கரில் பட்டுக்கூடு வளர்க்கப்படுகிறது. இத்தொழிலில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சேர வேண்டிய தொகையை பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வழங்கவில்லை.

நாங்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதை வெளிப்படையாக நடத்த வேண் டும், எங்களையும் உள்ளே அனு மதித்து, எங்களிடம் கருத்து கேட்க வேண்டும்.

உயிரிழந்த விவசாயிகளின் பெயரில் கணக்கு காட்டி பல்வேறு முறைகேடுகளில் பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வரு கின்றனர். இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும்.’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x