Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் 4427 பேர் தேர்வாகினர். இதில் 1700 பேருக்கு மதுரை ஆயுதப்படை மைதானத் திலும், 2727 பேருக்கு ரேஸ் கோர்ஸ் மைதானத்திலும் உடற்தகுதித் தேர்வு நேற்று காலை தொடங்கியது.
கரோனா பரிசோதனை சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு மற்றும் 1500 மீ. ஓட்டத்தேர்வுகள் நடந்தன. இத்தேர்வு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
ஆயுதப்படை மைதானத்தில் தென் மண்டல ஐஜி அன்பு, காவல் துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் கண்காணித்தனர்.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த தேர்வை பணியமைப்புத் துறை டிஐஜி பிரபாகரன், மதுரை காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து கண்காணித்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வை மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா பார்வையிட்டார். நேற்று முதல் கட்டமாக 500 பேர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் 2766 பேர், பெண்கள் 714 பேர் என மொத்தம் 3480 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்திறன் மற்றும் உடல்தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது.ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT