Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட - எம்பிபிஎஸ் மாணவர் உடலை வாங்க மறுத்து போராட்டம் :

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்துநகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் இருதயராஜ் (60). இவரது மகன்கள் ஜோசப் (25), கிறிஸ்டோபர் (22). பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்த இவர்கள், வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் அண்ணா மலை நகரில் உள்ள தங்களது தோட்டத்தில், மது அருந்திய 7 பேர் கொண்ட கும்பலை இருதயராஜ், ஜோசப், கிறிஸ்டோபர் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் 3 பேரையும் குத்தினர். இதில் கிறிஸ்டோபர் உயிரி ழந்தார். இக்கொலை தொடர் பாக மருதுபாண்டி, நந்தகுமார் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனை யில் கிறிஸ்டோபர் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்த அவரது உறவினர்கள். ஆனால் குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்யக் கோரி கிறிஸ்டோபர் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர். இதற்கிடையில், சிவகங்கை நேரு பஜாரைச் சேர்ந்த வசந்த் (23) என் பவரை போலீஸார் கைது செய் தனர். மேலும் தலைமறைவான 4 பேரைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து இருதயராஜ் கூறும்போது, ‘எங்களுக்கும் சிலருக்கும் இடம் தொடர்பான பிரச்சினை உள்ளது. இதனால் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘இருதயராஜ், ஜோசப், கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் தோட்டத்தில் மது அருந்தி யவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது அருந்தியவர்களையும், அந்த இடத்தையும் கிறிஸ் டோபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த அக்கும்பல் அவரை கொலை செய்துள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x