தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 இடங்களில் - விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 இடங்களில் -  விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை நடைபெறும் இடங்களில் நேற்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆச்சாம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.ராமச்சந்திரன் தலைமை வகித் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in