திருப்பத்தூர் அருகே : பச்சிளங் குழந்தை முட்புதரில் வீச்சு :

திருப்பத்தூர் அருகே : பச்சிளங் குழந்தை முட்புதரில் வீச்சு :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் அனேரி கிராமம் சாலையோரத்தில் உள்ள முட்புதரில் நேற்று பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை மீட்ட காவல் துறையினர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் பச்சிளங் குழந்தையை வீசிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in