கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் - 158 பேருக்கு கரோனா தொற்று :

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் -  158 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 28,798 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் 43,638 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 60,034

பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 92 பேர் உட்பட 58,383 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 766 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை 803 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in