விருதுநகர் அருகே குடும்ப பிரச்சினையால் - 2 குழந்தை கிணற்றில் வீசி கொலை : தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு

விருதுநகர் அருகே குடும்ப பிரச்சினையால்  -  2 குழந்தை கிணற்றில் வீசி கொலை :  தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு
Updated on
1 min read

விருதுநகர் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்தார். இதில், இரு குழந்தைகளும் இறந்தன. தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம்(35). இவரது முதல் மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தேன் மொழி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதையடுத்து சிவகங்கையைச் சேர்ந்த பிரவீனாவை பூங்காவனம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹர்ஷிகா(4), பூமிகா(11 மாதம்) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. பிரவீனாவுக்கும், பூங்காவனத்தின் முதல் மனைவியின் குழந்தைகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பிரவீனாவை பூங்காவனம் கண்டித்தார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது இரு குழந்தைகளை பிரவீனா அழைத்துச் சென்றார். திம்மாபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள பெரிய கிணற்றில் தனது இரு குழந்தைகளையும் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரியாபட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவி த்தனர். கிணற்றில் உயிருக்குப் போராடிய பிரவீனாவை தீயணைப்புத் துறையினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நீரில் மூழ்கி இறந்த ஹர்ஷிகா, பூமிகா ஆகியோரின் உடல்களை மீட்டனர். அ.முக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in