Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
கடலூர் மாவட்டம் காட்டுமன் னார்கோவில் லால்பேட்டை கிழக்கு மீனா தெருவைச் சேர்ந்த 11 பேர், நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு ஒரு வேனில் நேற்று சுற்றுலா சென்றனர். வேனை அஜய் (25) என்பவர் ஓட்டினார். நாகூர் தர்காவில் வழிபாடு நடத்திய அவர்கள், அங்கிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வேளாங்கண்ணிக்குச் சென்றனர். கருவேலங்கடை அருகே சென்ற போது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த இனாமுள் உசேன் (17), சாலி ஹாத்மேகம் (50), பாரிஸ் (14), டானிஷ் அஹமது (7), அப் துல்லா(12), சித்திகா பேகம் (45), பவுசியா பேகம் (35), அஸ்ரா (9), மெகராஜ் பேகம் (53), நஸ்மா ஜாஸ்மின் (15) மற்றும் ஓட்டுநர் அஜய் (25) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். 11 பேரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT