சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு :

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

செஞ்சி - நங்காத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (52). முன்னாள் ராணுவ வீரரான இவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு காது குத்தும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இரவு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது,முட்டத்துார் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்த எல்லப்பன் (40) என்பவர் மீது பைக் மோதியது. இதில் மணி,எல்லப்பன் இருவரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணி இறந்தார். முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எல்லப்பனும் நேற்று அதிகாலை இறந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in