Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

திண்டிவனத்தில் ரயில் பயணியிடம் செல்போன் பறித்தவர் கைது :

விழுப்புரம்

தென்காசியிலிருந்து சென்னை நோக்கி பொதிகை விரைவி ரயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது எஸ்- 1 கோச்சில் இளைஞர் ஒருவர் ஏறினார். ரயிலில் பயணித்த செங்கல்பட்டைச் சேர்ந்த ஜெபமணி செல்வராஜ் (57) என்பவரின் மொபைல் போனை பறித்தார்.

பின்னர் ரயிலை விட்டு இறங்கி வேகமாக ஓடினார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்தனர். உடனே அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு போலீஸார் மொபைலின் லோகேஷனை அறிந்து உடனே அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த அஜய்(25) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x