ராமநாதபுரத்தில் 3 பேர்குண்டர் சட்டத்தில் கைது :

ராமநாதபுரத்தில் 3 பேர்குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பூப்பாடியபுரம் பகுதியைச் சோ்ந்த கோட்டை சவரிமுத்து(50) என்பவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏர்வாடி நாச்சம்மைவாடிப் பகுதியில் கள் விற்றதாக சந்திரன்(52) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாயல்குடி மாதவன் நகரைச் சோ்ந்த கோயில் பூசாரி வீரன்(60) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன்(34) என்பவர் மது அருந்த பணம் தராததால் கட்டையால் தாக்கி கொலை செய்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோட்டை சவரிமுத்து, சந்திரன், சுரேஷ் கண்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடி க்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரைத்தார். அதை ஏற்று 3 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டார். இதையடுத்து மூவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in